டாக்டர் எம்ஜிஆர் பேச்சு மற்றும் காது கேளாதோர் இல்லம் மேல்நிலைப் பள்ளி ஆனது பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உடையோர் இலவசமாக பயின்று பயன்பெறும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தங்கும் இடம் உணவு சீருடை மற்றும் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்களின் பன்முக வளர்ச்சியை முன்னிட்டு அவர்களுக்கு வகுப்பறை பாடங்கள் மட்டுமல்லாமல் விளையாட்டு, கைவேலை, நடனம் போன்ற திறன்களை மேம்படுத்தும் வாய்ப்புகளும் அளிக்கப்படுகிறது யோகா, ஜிம்னாஸ்டிக், கிரிக்கெட் போன்ற திறன்களை வளர்க்கத் தக்க வல்லுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் அவர்களின் இயல் நாட்டத் திறன்களையும் ஆர்வங்களையும் கண்டறியும் வண்ணம் பேக்கிங், தையல், சமையல் ஒப்பனைகளை திரைஅச்சிடுதல் மற்றும் கைபேசியை பழுதுபார்த்தல் போன்ற அனைத்தையும் கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. டாக்டர் எம்ஜிஆர் பேச்சு மட்டும் காது கேளாதோர் இல்லம் மேல்நிலைப்பள்ளி 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஏழாம் நாள் தமிழ்நாடு அரசின் சமூக நலத்துரையால் அங்கீகரிக்கப்பட்டது. தற்போது மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் அலுவலகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எமது இல்லத்தில் ஆரம்பக் கல்வி முதல் 12 ஆம் வகுப்பு வரை 166 மாணவர்கள் இலவசமாக பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தங்கும் இடம் உணவு சீருடை என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது 30 ஆசிரியர்களும் 15 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் தனது உயர் உழைப்பை வழங்கி வருகின்றனர் இல்லத்தில் 70 மாணவர்களும் மூன்று பயிற்சி ஆசிரியர்களும் தங்கி பயன் பெறுகின்றனர்.
மாணவர்கள் மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு மாபெரும் பரிசுகளையும் உயரிய கோப்பைகளையும் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். இது அவர்களின் அர்ப்பணிப்பு திறனையும் கடுமையான பயிற்சித் திறனையும் விளையாட்டு ஆளுமை பண்பையும் வெளிப்படுத்துகிறது.
டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் கனவை நினைவாக்கும் வண்ணம் டாக்டர் எம்ஜிஆர் பேச்சு மற்றும் காது கேளாதோர் இல்லம் மேல்நிலைப் பள்ளி ஆனது எம்ஜிஆர் தோட்டத்தில் 1990 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் அன்று காஞ்சி காமகோடி பீடம் ஜகத் குரு சங்கராச்சாரியார் அவர்களின் முன்னிலையில் தொடங்கப்பட்டது . இப்பள்ளியானது மாணவர்களுக்கு உயர்தர கல்வியை வழங்குவதுடன் அவர்கள் நிறைவான வாழ்க்கையை நடத்துவதற்கும் வழி வகுக்கிறது.
மக்கள் திலகம் அவர்களின் எண்ணத்தின் ஏற்றமாய் பல்வேறு முயற்சிகளின் விளைவாய் அன்னை ஜானகி அம்மையார் திரு எம் சி ராகவாச்சாரி திரியும் ராஜேந்திரன் ஆகியோரின் முயற்சியால் இத்துறை சார்ந்த வல்லுனர்களின் அரிய ஆலோசனையின் அடிப்படையில் டாக்டர் எம்ஜிஆர் பேச்சு மட்டும் காது கேளாதோர் இல்லம் மேல்நிலைப்பள்ளி நிறுவப்பட்டது. மேற்குறிப்பிட்ட சான்றோர்களின் முயற்சியால் பள்ளியானது தனது பணியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் எம்ஜிஆர் பேச்சு மற்றும் காது கேளாதோர் இல்லம் மேல்நிலைப் பள்ளியானது செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடுள்ள மாணவர்களின் திறன்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு அளித்து பல சாதனைகள் புரிய துணை நின்று வருகிறது. இது மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது.
எங்கள் பள்ளியில் பயிலும் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை 100% தேர்ச்சி பெறச் செய்துள்ளோம்.
மாணவர்கள் தன்னம்பிக்கையோடு பங்கு கொள்ளும் விதமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தியுள்ளோம்.
எங்கள் பள்ளி ஒற்றுமை உணர்வு, ஒத்துழைப்பு, மரியாதை மற்றும் சமூகத்தின் வலுவான உணர்வை வளர்க்கிறது.
டாக்டர் எம்ஜிஆர் பேச்சு மற்றும் காது இயலாதவர் இல்லம் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்காக பாதுகாப்பான இடவசதியுடன் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் புரிந்து வருகிறது
டாக்டர் எம்ஜிஆர் பேச்சு மற்றும் காது கேளாதோர் இல்லம் மேல்நிலைப் பள்ளியானது இளநிலை பட்டப் படிப்பிற்கான பயிற்சி மையமாகவும் செயல்பட்டு வருகிறது.
டாக்டர் எம்ஜிஆர் சிறப்பு கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்புக் கல்வியியல் பயிலும் மாணவர்கள், டாக்டர் எம்ஜிஆர் பேச்சு மற்றும் காது கேளாதோர் இல்லம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி ஆசிரியர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
நம் பள்ளியில் மேல்நிலைப் படிப்பை முடித்த செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்கள் பட்ட மேற்படிப்புப் படிக்கின்றனர் .