எங்கள் நிறுவனர் கொள்கை
பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதோடு அவர்கள் சமுதாயத்துடன் ஒருங்கிணைந்து வாழ வழிவகுக்கும் வகையில் இம்மையம் அமைய வேண்டும் என்று எண்ணினார். அதனால் இம்மையத்தில் பயன்பெற்றவர்கள் சுதந்திரமான, நிறைவான வாழ்கையை வாழ இயல்கிறது.
99%
வெற்றி பெற்ற மாணவர்கள் :
எங்கள் மாணவர்கள் வெற்றிபெறத் தடையாக உள்ளவற்றைத் தகர்த்து தங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்தும் உறுதியையும் நன்கு வழவமைக்கப்பட்ட கல்வியையும் பெற்று முதன்மையாகத் திகழ்வார்கள்.
பல வருட அனுபவம் பெற்ற சிறப்புப்பள்ளி
4.4
பள்ளி மதிப்பீடுகள்
செவித்திறன் குறையுடைய மாணவர்களின் கல்விக்கான பள்ளி என்ற சிறந்த மதிப்பீட்டை தொடர்ந்து பெற்று வருகிறது.

எங்கள் இலட்சியத்தின் தொலைநோக்கு வழிகாட்டி

பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரனின் அனுபவங்கள், பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் மீது அவருக்கு ஆழ்ந்த இரக்கத்தை உருவாக்கியது. அவர்கள் எதிர்கொண்ட சமூக மற்றும் கல்வி தடைகளை உணர்ந்து, அவற்றை எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதில் உறுதியாக இருந்தார். பேச்சு மற்றும் செவித்திறன் குறையுடையோர் கல்வி பெறுவது மட்டுமல்லாமல், தங்கள் திறன்களைக் கண்டறிந்து வளர்த்துக் கொள்ளவும், சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் வாய்ப்புகளைப் பெறும் ஓர் உலகத்தை எம்.ஜி.ஆர் கனவு கண்டார்.

தொலைநோக்குபார்வை

மௌனத்தை உடைத்து, எதிர்காலத்தை உருவாக்க

மேற்கொண்டபணி

  • பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை வழங்குதல்.
  • பல்வேறு உத்திகள் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் தகவல்தொடர்புக்கு முன்னுரிமை அளித்தல்.
  • பேச்சு மற்றும் செவித்திறன் குறையுடையோரின் சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துதல்.
  • மாணவர்கள் தன்னம்பிக்கையோடு சுதந்திரமாகவும் செயல்பட வாய்ப்பு அளித்தல்.
  • மாணவர்களின் தனித்துவமான தேவைகள் மற்றும் திறன்களுக்கு முன்னுரிமை அளித்தல்.
மாற்றுத்திறனாளிகளின் கல்விக்கு ஆதரவு அளித்தல்

திருமதி ஜானகி அம்மா அவர்களின் முயற்சியும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் கொடைத்தன்மையும் இணைந்து, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தரமான கல்வியை  வழங்குவதை உறுதிசெய்தது.

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் எண்ணங்களைப் பின்பற்றுதல்

சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்கள் கண்ணியத்துடனும் சுதந்திரத்துடனும் நிறைவான வாழ்க்கையை நடத்த முடியும் என்று எண்ணிய திருமதி ஜானகி அம்மாள் அவர்களின் தொலைநோக்குப்பார்வைக்கு சான்றாக எம் பள்ளி திகழ்கிறது.

திருமதி ஜானகி ராமச்சந்திரனின் பங்களிப்பு: பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுயுடையோர்களுக்கான டாக்டர் எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு அவர் வழங்கிய பங்களிப்புகள்

திருமதி. ஜானகி அம்மாள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட புரட்சித்தலைவரின் பல சமூக முயற்சிகளுக்கு வழிகாட்டும் சக்தியாக இருந்தார்.

பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வழங்குவது உட்பட, பள்ளியின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக, வளங்களை ஒதுக்கீடு செய்ய அவர் ஊக்குவித்தார்.

MGR

திரு. எம். ராஜேந்திரன்

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் உயிலை நிறைவேற்றுபவரும், நிறுவன அறங்காவலருமான திரு. எம். ராஜேந்திரன், பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான டாக்டர் எம்.ஜி.ஆர். இல்லம் அமைய அடித்தளங்களை அமைத்தார்.

தொலைநோக்குப் பார்வையை நனவாக்குதல்

டாக்டர். லதா ராஜேந்திரன்

கலைமாமணி டாக்டர். லதா ராஜேந்திரன் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர்களுக்கான டாக்டர் எம்.ஜி.ஆர். இல்லம் மற்றும் மேல்நிலைப் பள்ளியின் நிறுவன முதல்வர் (1990-2014) மற்றும் தற்போதைய இயக்குனர் ஆவார். அவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சிறப்பு கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வராகவும் செயல்படுகிறார்.

அவர் 1984 முதல் 1990 வரை ஜே.ஆர்.கே. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வராகப் பணியாற்றினார்.

அவர் கல்வித்துறையில் முனைவர் பட்டமும் (Ph.D), (M.Phil – கல்வி), மனிதவள மேலாண்மை மற்றும் முதுகலை பட்டம், சமூகவியலில் முதுகலைப் பட்டமும் (M.A.), மக்கள் தொடர்பு குறித்த படிப்பு பட்டயமும் (Diploma) பெற்றுள்ளார்.

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கலாடெட் பல்கலைக்கழகத்தில், காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான இளமையில் வழிகாட்டுதலில் பயிற்சி பெற்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த சமூக சேவகர் விருதையும், 1996 ஆம் ஆண்டில் தமிழக அரசிடமிருந்து செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்குக் கற்பித்தலில் சிறந்த ஆசிரியர் விருதையும் அவர் பெற்றுள்ளார்.

கல்வி

தமிழ்நாடு மாநில பாடத்திட்டம்

எங்கள் மாணவர்களுக்கு கட்டமைக்கப்பட்ட மற்றும் விரிவான கல்வியை உறுதி செய்யும் வகையில் மாநில பாடத்திட்டத்தை நாங்கள் பின்பற்றுகிறோம்.

மாநில வாரிய பாடத்திட்டத்தைத் தவிர, எங்கள் குழந்தைகளின் தகவல் தொடர்பு மற்றும் மொழி வளர்ச்சியை மேம்படுத்த, மழலையர் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் வாசிப்பு, படக்கட்டுரை, செவி கேட்டல் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, கதை சொல்லுதல், உதட்டசைவைப் புரிதல் வாசிப்பு மற்றும் தாளத்துடன் கூடிய மழலையர் பாட்டு ஆகியவை அடங்கும்.

மேல்நிலைப் பள்ளி பாடத்திட்டத்தை, ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் வழங்குகிறோம்: ஆங்கிலவழிக் கற்றலில், பொருளாதாரம், வணிகவியல், கணினி பயன்பாடு மற்றும் கணக்குப்பதிவியல் போன்ற பாடங்கள் அடங்கும். தமிழ்வழிக் கற்றலில், பொருளாதாரம், வணிகவியல், வணிக கணிதம் மற்றும் கணக்குப்பதிவியல் போன்ற பாடங்கள் அடங்கும். தொழிற்கல்வி பிரிவில் தமிழ், ஆங்கிலத் தட்டச்சு மற்றும் கணினி பயன்பாடு, வணிகவியல்,கணக்குப்பதிவியல் மற்றும் அலுவலக மேலாண்மை மற்றும் செயலர் பதவி போன்ற பாடங்கள் அடங்கும்.

டைம்ஸ் நாளிதழின் கல்வி சின்னம் விருது 2023-24

நிறுவனர்கள், அர்ப்பணிப்புள்ள கல்வியாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு முயற்சிகளுக்கான அங்கீகாரமாக, 2023-24 கல்வி ஆண்டுக்கான “டைம்ஸ் கல்வி ஐகான் விருது” டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழால் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
anil-kapur

மாணவர்களின் சாதனைகள்

பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான, டாக்டர் எம்.ஜி.ஆர். இல்லம் மற்றும் மேல்நிலைப் பள்ளி எங்கள் மாணவர்களின் குறிப்பிடத்தக்க சிறந்த சாதனைகளை பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்த அங்கீகாரங்கள் அவர்களின் ஆக்கப்பூர்வமான சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன, இது பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களை மேம்படுத்துவதில் பள்ளியின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

Dance-winners
Scroll to Top