கலைமாமணி டாக்டர். லதா ராஜேந்திரன் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர்களுக்கான டாக்டர் எம்.ஜி.ஆர். இல்லம் மற்றும் மேல்நிலைப் பள்ளியின் நிறுவன முதல்வர் (1990-2014) மற்றும் தற்போதைய இயக்குனர் ஆவார். அவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சிறப்பு கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வராகவும் செயல்படுகிறார்.
அவர் 1984 முதல் 1990 வரை ஜே.ஆர்.கே. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வராகப் பணியாற்றினார்.
அவர் கல்வித்துறையில் முனைவர் பட்டமும் (Ph.D), (M.Phil – கல்வி), மனிதவள மேலாண்மை மற்றும் முதுகலை பட்டம், சமூகவியலில் முதுகலைப் பட்டமும் (M.A.), மக்கள் தொடர்பு குறித்த படிப்பு பட்டயமும் (Diploma) பெற்றுள்ளார்.
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கலாடெட் பல்கலைக்கழகத்தில், காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான இளமையில் வழிகாட்டுதலில் பயிற்சி பெற்றுள்ளார்.
2018 ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த சமூக சேவகர் விருதையும், 1996 ஆம் ஆண்டில் தமிழக அரசிடமிருந்து செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்குக் கற்பித்தலில் சிறந்த ஆசிரியர் விருதையும் அவர் பெற்றுள்ளார்.